Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அனுமதியின்றி நடத்திய சாயப்பட்டறைக்கு, "சீல்'

அனுமதியின்றி நடத்திய சாயப்பட்டறைக்கு, "சீல்'

அனுமதியின்றி நடத்திய சாயப்பட்டறைக்கு, "சீல்'

அனுமதியின்றி நடத்திய சாயப்பட்டறைக்கு, "சீல்'

ADDED : ஜூலை 12, 2011 12:18 AM


Google News
Latest Tamil News

உச்சிப்புளி : உச்சிப்புளி அருகே, அனுமதியின்றி நடத்திய சாயப்பட்டறைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்து, நான்கு பேரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், மண்டபம் பிரப்பன்வலசையில் தனியார் இடத்தை வாடகைக்கு பிடித்தார். இங்கு அவரது தம்பி கண்ணன் மற்றும் சிலர் சேர்ந்து, அனுமதியின்றி சாயப்பட்டறை நடத்தினர். ராமநாதபுரம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, துணை தாசில்தார் தமீம், சாயப்பட்டறையை சோதனையிட்டபோது, அனுமதியின்றி நடத்தியது தெரிந்தது. அங்கு பணியாற்றிய கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த தினகரன், 22, பொன்னுலிங்கம், 22, சத்தியமூர்த்தி, 22, பெரம்பலூரைச் சேர்ந்த கண்ணன், 20, ஆகியோரை பிடித்து, உச்சிப்புளி போலீசில் ஒப்படைத்தனர். ரூ. 25 லட்சம் மதிப்புடைய இயந்திரங்களை பறிமுதல் செய்து, சாயப்பட்டறைக்கு சீல் வைத்தனர். தலைமறைவான உரிமையாளர் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us