ADDED : ஜூலை 11, 2011 10:51 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கொளூர்பட்டி தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி(48), இவர் கோட்டைப்பட்டியில் ஸ்ரீவி.,நகராட்சி குடிநீர் தொட்டி காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன் தினம் பணியில் இருந்த போது முகத்தில் துணியை சுற்றியபடி வந்த நபர் தாக்கியதில் காயமடைந்தார். இவரது புகார்படி ஸ்ரீவி.,டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.