Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பாதயாத்திரை செல்ல பா.ஜ., முடிவு

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பாதயாத்திரை செல்ல பா.ஜ., முடிவு

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பாதயாத்திரை செல்ல பா.ஜ., முடிவு

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பாதயாத்திரை செல்ல பா.ஜ., முடிவு

ADDED : ஜூலை 11, 2011 10:30 PM


Google News

கோவை : அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக் கோரி, பாதயாத்திரை நடத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது.பா.ஜ., வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, மாநிலச் செயலாளர் செல்வக்குமார் தலைமையில் அடுத்த மாதம் பாதயாத்திரை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதரதீர்மானங்கள்:கொப்பரைத் தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்; பி.ஏ.பி., நீரை பாசனத்துக்காக ஆகஸ்ட் முதல் தேதி திறந்து விட வேண்டும்; நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; முத்துக்கவுண்டனூர், சோமனூர் ரயில்வே மேம்பாலப் பணியை உடனடியாக துவக்க வேண்டும்; அன்னூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us