ADDED : ஜூலை 13, 2011 01:12 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் கஸ்தூரிபாய் காந்தி உண்டு உறைவிட பள்ளியில்
உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு பேச்சு போட்டி நடந்தது.
நிகழ்ச்சிக்கு
ரோஸ் எட் அறக்கட்டளை இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஓய்வு
பெற்ற தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆசிரியை ரேணுகா
வரவேற்றார். 'மக்கள் தொகை பெருக்கம்' என்ற தலைப்பில் மாணவிகளுக்கு பேச்சு
போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆசிரியைகள் சாந்தி, தங்கம், சீத்தாலட்சுமி, ஜூலி, தனலட்சுமி கலந்து
கொண்டனர். இளையராணி நன்றி கூறினார்.