ADDED : செப் 23, 2011 01:17 AM
விழுப்புரம்:விழுப்புரத்தில் ம.தி.மு.க., சார்பில் பெரியார், அண்ணாதுரை
பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் ரயிலடியில் நடந்த
கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பாபுகோவிந்தராசு தலைமை
தாங்கினார்.
நகர செயலாளர் சம்மந்தம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மணி,
கடலூர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், பொறுப்புக்குழு உறுப்பினர்
பன்னீர்செல்வம், அவைத் தலைவர் துரை, தலைமை செயற்குழு நிர்வாகிகள் நடராஜன்,
பரசுராமன், பொருளாளர் சவுகத்அலி, மாநில வழக்கறிஞர் அணி மன்னப்பன், நகர
செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தனர்.மாநில பொருளாளர் மாசிலாமணி, கொள்கை
பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினர். ஒன்றிய செயலாளர்கள்
குணசேகர், ராமலிங்கம், சம்பத், பெருமாள், சீத் தாராமன் பங்கேற்றனர்.
கோதண்டராமன் நன்றி கூறினார்.