ADDED : ஆக 01, 2011 08:42 PM
அன்னூர்: சாலையை கடக்கும் போது வாகனம் மோதி பள்ளி மாணவி பலியானார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த குருசாமி என்பவரது மகள் கோகிலா(14). இவர் அன்னூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். மாலை பள்ளி முடிந்த பின்னர் பள்ளி வாயிலில் பஸ்சுக்காக சாலையை கடக்கும்போது கோவை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோகிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். இந்த சம்பவம் பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.