/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காவலர் குடும்பத்தினருக்கான மருத்துவ சிகிச்சை முகாம்காவலர் குடும்பத்தினருக்கான மருத்துவ சிகிச்சை முகாம்
காவலர் குடும்பத்தினருக்கான மருத்துவ சிகிச்சை முகாம்
காவலர் குடும்பத்தினருக்கான மருத்துவ சிகிச்சை முகாம்
காவலர் குடும்பத்தினருக்கான மருத்துவ சிகிச்சை முகாம்
ADDED : ஆக 08, 2011 04:05 AM
கடலூர் : மாவட்ட காவல் துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கடலூர் கிளை சார்பில் காவலர் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாம் நேற்று கடலூரில் நடந்தது.முகாமை எஸ்.பி., பகலவன் துவக்கி வைத்தார்.
முகாமில் இந்திய மருத்துவச் சங்க கிளைத் தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், செயலர் சந்திரலாதன், கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் மற்றும் ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் ராஜேந்திரன், டி.எஸ்.பி.,க்கள் சவுந்தர்ராஜன், வனிதா ஆகியோர் பங்கேற்றனர்.மருத்துவ காவலர் குடுபத்தினர்களுக்கு ரத்தம், சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி., மற்றும் எச்.பி.ஏ.1சி போன்ற உயர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.மேலும் பொது, மகப்பேறு, குழந்தைகள் நல சிகிச்சை மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, நரம்பியல் நோய் சிகிச்சை, கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்ட மருத்துவம் என அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், ஜெயவீரகுமார், பாண்டியன் உள்ளிட்டோர் சிறப்பு சிகிச்சை அளித்தனர்.


