ADDED : ஆக 28, 2011 12:07 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த வேங்கூர், அம்மன்கொல்லைமேடு அண்ணாநகர் பகுதிகளில் 500 ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் இங்கிருந்த 20 க்கும் மேற்பட்ட விவசாய மோட்டார் களில் இருந்து மின் ஒயர்கள் திருடப்பட்டிருந்தது. இதனால் ஒவ்வொரு விவசாயிக்கும் 5,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


