Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/அ.தி.மு.க.,வினர் அன்னதானம்

அ.தி.மு.க.,வினர் அன்னதானம்

அ.தி.மு.க.,வினர் அன்னதானம்

அ.தி.மு.க.,வினர் அன்னதானம்

ADDED : ஜூலை 14, 2011 12:04 AM


Google News
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஜெ., முதல்வராக வேண்டியபடி, அ.தி.மு.க.,வினர் அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (35). இவர் அ.தி.மு.க.,வின் தீவிர விசுவாசி ஆவர். தற்போது இளைஞரணி வேப்பந்தட்டை ஒன்றிய துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதா வந்தால் கிடா வெட்டி அன்னதானம் வழங்குவதாக கடம்பூர் காசிமுனிஅய்யா கோவிலில் வேண்டுதல் செய்திருந்தார். இவரின் வேண்டுதல்படி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இதைத்தொடர்ந்து கடம்பூர் சரவணன் தனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கடம்பூர் காசிமுனிஅய்யா கோயிலில் கிடா வெட்டி அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் இளவழகன், நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, வார்டு கவுன்சிலர்கள் சூரியக்குமார், தேவராஜன், மேலவை பிரதிநிதி செந்தில், நகர செயலாளர் வினோத், டாக்டர் ஆனந்தமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us