ADDED : ஜூலை 11, 2011 10:41 PM
தாண்டிக்குடி : அஞ்சல்துறை எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தாண்டிக்குடியில் ஒரு நாள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் அஞ்சல்துறை கோட்ட கண்கானிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் 130 பேர் தாண்டிக்குடி, ஜெரோனியம், அரசன்கொடை, பெரும்பள்ளம், வடகவுஞ்சியில் பயிற்சியில் ஈடுபட்டனர். மதுரை அஞ்சல்துறை பயிற்சி மைய ஆசிரியர் முத்துகுமாரசாமி, தபால் அலுவலர் விஜயன் கலந்து கொண்டனர்.