/உள்ளூர் செய்திகள்/மதுரை/பருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதிபருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதி
பருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதி
பருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதி
பருவ மழையை நம்பி பணிகளை துவக்கிய விவசாயிகள் : பொட்டாஷ் உரமின்றி அவதி
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளில் பருவமழை மற்றும் வைகை அணை தண்ணீரை நம்பி விவசாய பணிகளை துவக்கிய விவசாயிகள், பொட்டாஷ் உரம் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.
தென்பழஞ்சி விவசாயி சிவராமன் கூறுகையில், ''பருவமழை துவங்கிய நிலையில், வைகை அணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது ஒரு போக விவசாயத்திற்கு போதும். சென்றாண்டு பெய்த கன மழையால், மானாவாரி பகுதி நீர்நிலைகள், 42 ஆண்டுக்குப்பின் நிரம்பியதால், நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால், மானாவாரி பகுதிகளிலும் 2 போகம் நெல் விளைவிக்க முடியும். பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை. உரம் கிடைக்கவும், தற்போது விவசாயத்திற்கு இரவு நேரத்தில் 8 மணிநேரமும், பகல் நேரத்தில் 6 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதை பகலில் 10 மணிநேரம், இரவில் 6 மணிநேரமாக மாற்ற வேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையில், மெஷின் நடவுக்கு ஏக்கருக்கு ரூ. 3,500 கொடுக்கிறோம். வேளாண் துறை மூலம் அரசு மெஷினை கொடுத்து, குறைந்த வாடகைக்கு விவசாயிகளுக்கு கொடுக்கலாம், என்றார்.


