/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்புபண்ருட்டி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
பண்ருட்டி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
பண்ருட்டி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
பண்ருட்டி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : செப் 06, 2011 01:08 AM
பண்ருட்டி: பண்ருட்டி மாஜிஸ்திரேட்டை கண்டித்து வழக்கறிஞர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி பார் அசோசியேஷன் அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று வழக்கறிஞர் வடிவேலன் தலைமையில் நடந்தது.பண்ருட்டி மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் வாரண்ட் நிலுவை வழக்கில் சரண்டர் ஆனவரை கைது செய்ய உத்தரவிட்டு, பின்னர் அவர் ஓடியதால், வாரண்டை மாஜிஸ்திரேட் ரத்து செய்ததாக தெரிகிறது. இச்செயலை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த மாஜிஸ்திரேட் கோர்ட் 1ன் பணிகளை காலவரையின்றி புறக்கணிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கு வழக்கறிஞர் சங்கம், கிரிமினல் பார் அசோசியேஷனின் ஆதரவை கோர முடிவு செய்யப்பட்டது.