ADDED : செப் 23, 2011 11:53 PM
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் 26ம் தேதி ஒரே நாளில் மனு தாக்கல் செய்கின்றனர்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்கிறது.
அ.தி.மு.க., போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், பெரும்பாலும் அறிவிக்கப்பட்டு விட்டது. தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகள், முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, வரும் 26ம்தேதிக்கு பின் வேட்பாளர்களை வெளியிடவுள்ளது. பா.ஜ., இரு கம்யூனிஸ்டுகள், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளும், விரைவில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளன. அ.தி.மு.க., வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும், 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். கட்சிகளின் தேர்தல் பிரசாரம், அடுத்த மாதம் 1ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.