அமெரிக்க முத்திரை பதித்த போலி தங்க பிஸ்கட் விற்றவர் கைது
அமெரிக்க முத்திரை பதித்த போலி தங்க பிஸ்கட் விற்றவர் கைது
அமெரிக்க முத்திரை பதித்த போலி தங்க பிஸ்கட் விற்றவர் கைது
திருவள்ளூர்:அமெரிக்க முத்திரை பதித்த, போலி தங்க பிஸ்கட்களை விற்ற நபரை, திருவள்ளூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் செட்டியாரின் மகன் லோகநாதன், 56; நில புரோக்கர்.
அதைப் பெற்றுக் கொண்ட லோகநாதன், தனக்குத் தெரிந்த அடகுக் கடைக்காரரிடம் கொண்டு போய் காட்டியுள்ளார். தங்கக் கட்டிகளை பரிசோதித்த நகைக் கடைக்காரர், அவை போலி எனக் கூறியுள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த லோகநாதன், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், சமயோசிதமாக செயல்பட்டார். அவர் பிரேம்சந்திடம், 'நீங்கள் கொடுத்த தங்கக் கட்டிகளை விற்றுவிட்டேன். அதற்கான பணத்தை வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினார்.
பணத்தை வாங்குவதற்காக பிரேம்சந்த் நேற்று, திருவள்ளூருக்கு வந்தார். அப்போது, லோகநாதன் தனது நண்பர்களான வெங்கத்தூர் கண்டிகையைச் சேர்ந்த ஏழுமலை, திருவள்ளூர் மணவாள நகரைச் சேர்ந்த குபேந்திரன் ஆகியோரின் உதவியுடன், பிரேம்சந்த்தை பிடித்து, திருவள்ளூர் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.அவரிடம் இன்ஸ்பெக்டர் தயாளன், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் இளங்கோ, வெங்கடேசன், தலைமைக் காவலர்கள் சந்திரன், சரவணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. பிரேம்சந்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.