ADDED : செப் 04, 2011 10:09 PM
நரிக்குடி:நரிக்குடி அருகே நாலூரை சேர்ந்தவர் குருநாதன் மனைவி மீனாட்சி.
இவரது மகன் ரமேஷ், இதே ஊரை சேர்ந்த வேல்பாண்டி மனைவி சாந்தியுடன் கள்ளக்
காதல் கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் சிலர்
மீனாட்சியை அரிவாளால் வெட்டினர். மீனாட்சி புகார்படி நரிக்குடி போலீசார்
கோவிந்தன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.