Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கீழாம்பூரில் மனித உரிமைகள்கழக அலுவலகம் திறப்பு

கீழாம்பூரில் மனித உரிமைகள்கழக அலுவலகம் திறப்பு

கீழாம்பூரில் மனித உரிமைகள்கழக அலுவலகம் திறப்பு

கீழாம்பூரில் மனித உரிமைகள்கழக அலுவலகம் திறப்பு

ADDED : ஆக 26, 2011 01:31 AM


Google News
ஆழ்வார்குறிச்சி:கீழாம்பூரில் மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் கடையம் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு சர்வதேச தலைவர் டாக்டர் சுரேஷ்கண்ணன் தலைமை வகித்தார்.

பொது செயலாளர் ஜெயபாலன் அலுவலகத்தை திறந்து வைத்தார். தலைவர், செயலாளருக்கு அனைத்து நிர்வாகிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் கண்ணன், கிளை அமைப்பாளர் கல்யாணசுந்தரம், ஒன்றிய அமைப்பாளர் குமாரவேல், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கணேசன், கிளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேசன், கிளை துணை அமைப்பாளர் வெள்ளசாமி உட்பட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆம்பூர் கிளை மற்றும் கடையம் ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us