கள்ளச் சந்தை தடுப்புச் சட்டம் மில் அதிபர்கள் மனு தள்ளுபடி
கள்ளச் சந்தை தடுப்புச் சட்டம் மில் அதிபர்கள் மனு தள்ளுபடி
கள்ளச் சந்தை தடுப்புச் சட்டம் மில் அதிபர்கள் மனு தள்ளுபடி
சென்னை : கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, மில் அதிபர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
அரசுத் தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், 'அனுமானத்தின் அடிப்படையில், மனுதாரர்கள் நிவாரணம் கோருகின்றனர். சட்டத்தை மீறுபவர்களைக் காவலில் வைக்க, அரசுக்கு அதிகாரம் உள்ளது. காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம். இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல' என, வாதாடினார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: அனுமானத்தின் அடிப்படையில், கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, மனுதாரர்கள் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். முகாந்திரம் இருந்தால், ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு, அரசுக்கு அதிகாரம் உள்ளது. அத்தகைய உத்தரவு பிறப்பிப்பது என்பது, அதிகாரிகள் திருப்தியின் அடிப்படையிலானது. காவலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு தொடுக்கலாம். அதற்கு முன்கூட்டியே, வழக்கு தொடர முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.