Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

ADDED : செப் 17, 2011 01:22 AM


Google News

தர்மபுரி: பஸ் விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காத அரசு பஸ் நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டது.தர்மபுரி அடுத்த பையர்நாயக்கன்பட்டி சேர்ந்தவர் வேடிச்சி கவுண்டர்.

இவரது மகன் சேட்டு (16). கடந்த 2006ம் ஆண்டு கோவையில் உள்ள இவர்களது உறவினர்களை பார்க்க கோவை மாவட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்ஸில் பயணம் சென்றார். அப்போது, கோவை அருகே பஸ் மரத்தின் மீது மோதியதில் சேட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்ற சேட்டு, தனக்கு அரசு போக்குவரத்து கழம் இழப்பீடு வழங்க வேண்டும் என தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், மனுதாரருக்கு இழப்பீடு தொகையாக 43 ஆயிரம் வழங்க வேண்டும் என தர்மபுரி விரைவு நீதிமன்றம் கடந்த 2009 ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், போக்குவரத்து கழம் உரிய இழப்பீடு வழங்கவில்லை. இது குறித்து சேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். மனுதாரருக்கு வட்டி தொகையுடன் 59 ஆயிரத்து 772 ரூபாய் போக்குவரத்து கழம் வழங்க வேண்டும். தவறினால், பஸ் ஜப்தி செய்யப்படும் என விரைவு நீதிமன்ற நீதிபதி பத்பநாபன் உத்தரவிட்டார். அதன் பின்பும் மனுதாரருக்கு இழப்பீடு வழங்காததால், நேற்று நீதிமன்ற அமீனாக்கள் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் கோவை செல்ல காத்திருந்த கோவை மண்டல அரசு பஸ்ஸை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us