Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மீட்கப்பட்ட 4 மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட 4 மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட 4 மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட 4 மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ADDED : செப் 26, 2011 10:45 PM


Google News

கோவை : கோவையில் இருந்து காணாமல் போன பள்ளி மாணவர்கள் நான்கு பேரை மீட்டு, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.போத்தனூர் - மேட்டூரைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் திருமணிராஜா(14), ஈச்சனாரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன்.

கடந்த 14 அன்று மாலை நண்பன் ஜாவித் மியாண்டட்(16)டுடன், உடற்பயிற்சிக்கு செல்வதாகக் கூறி வெளியில் சென்றவன் வீடு திரும்பவில்லை.

போத்தனூர், ஜோதிநகரைச் சேர்ந்த செய்யதுஅமீர் என்பவரின் மகன் செய்யது உசேன்(14); 8ம் வகுப்பு மாணவர். கடந்த 21 அன்று காலை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றவன், திவாகர்(15) என்பவருடன் சேர்ந்து காணாமல் போய்விட்டார்.காணாமல் நான்கு மாணவர்களை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ்புஜாரி உத்தரவில் தனிப்படை போலீசார் தேடினர். இதில், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றி கொண்டிருந்த நான்கு மாணவர்களையும் மீட்டனர்.பெற்றோரை வரவழைத்த போத்தனூர் போலீசார், நேற்று நான்கு மாணவர்களையும் ஒப்படைத்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us