Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/நகராட்சி தலைவர் வேட்பாளரை மாற்ற கோரி துறையூர் தி.மு.க.,வினர் சென்னை பயணம்

நகராட்சி தலைவர் வேட்பாளரை மாற்ற கோரி துறையூர் தி.மு.க.,வினர் சென்னை பயணம்

நகராட்சி தலைவர் வேட்பாளரை மாற்ற கோரி துறையூர் தி.மு.க.,வினர் சென்னை பயணம்

நகராட்சி தலைவர் வேட்பாளரை மாற்ற கோரி துறையூர் தி.மு.க.,வினர் சென்னை பயணம்

ADDED : செப் 24, 2011 11:48 PM


Google News

துறையூர்: துறையூர் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில், அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி துறையூர் நகர தி.மு.க., நிர்வாகிகள் கூண்டோடு சென்னை சென்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் தலைவர் மற்றும் 24 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அடுத்த மாதம் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கு தி.மு.க., சார்பில், தலைவர் பதவிக்கான வேட்பாளராக வீரமணிகண்டனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தி.மு.க., தலைமை அறிவித்தது. இதில், அதிருப்தியடைந்த துறையூர் நகர தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் 24 வார்டுகளில் உள்ள கட்சியின் வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள், 'தலைவர் பதவிக்கான வேட்பாளர் வீரமணிகண்டனை மாற்ற வேண்டும்' என திருச்சி வந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினிடம் முறையிட்டனர்.



அவர் உறுதியளிக்காததால், நேற்று முன்தினம் இரவு முன்னாள் அரங்காவலர் குழுத் தலைவர் முரளியை தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்த நகர நிர்வாகிகளும், வார்டு செயலாளர், பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள் 100 பேர் சென்னை சென்றுள்ளனர். கருணாநிதியை சந்தித்து முறையிட உள்ளனர். அனைவரும் நேற்று காலை 11.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலினிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us