ADDED : ஆக 01, 2011 01:59 AM
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
அன்று பால்வண்ணநாத சுவாமி சன்னதி கொடிமரத்திற்கு அருகேயுள்ள நந்தீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், மாலை, இளநீர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி போன்ற அபிஷேகம் நடந்தது.பின்னர் பிரதோஷ நாயகன் சுவாமி சந்திரசேகரர் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் மூன்று முறை பவனி, நந்தீஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியார், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.