சென்னை : தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட்டு பெற்றுத் தருவதாக, 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், மத்திய அமைச்சர் ஜகத்ரட்சகன், அவரது மகன், மகள் மற்றும் பலர் மீது, புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் முரளி, 45.
சொன்னபடி, முரளி மற்றும் சிவசங்கருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட்டு தரவில்லை; பணத்தையும் திருப்பித் தராமல் காமராஜ் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து முரளி மற்றும் சிவசங்கர், புறநகர் கமிஷனர் கரன்சின்காவிடம் புகார் அளித்தனர்.
புறநகர் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கோவிந்தராஜை, விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டனர். அதன்படி, முரளி மற்றும் சிவசங்கர் கொடுத்த புகாரின்படி, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அவரது மகன் சந்தீப் ஆனந்த், மகள் ஸ்ரீநிஷா, உறவினர் காமராஜ், கர்ணல், கஜேந்திரபாபு, ரித்தீஷ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.