/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தண்ணீர் இன்றி வாடும் எலுமிச்சை மரங்கள் புளியங்குடி விவசாயிகள் கண்ணீர்தண்ணீர் இன்றி வாடும் எலுமிச்சை மரங்கள் புளியங்குடி விவசாயிகள் கண்ணீர்
தண்ணீர் இன்றி வாடும் எலுமிச்சை மரங்கள் புளியங்குடி விவசாயிகள் கண்ணீர்
தண்ணீர் இன்றி வாடும் எலுமிச்சை மரங்கள் புளியங்குடி விவசாயிகள் கண்ணீர்
தண்ணீர் இன்றி வாடும் எலுமிச்சை மரங்கள் புளியங்குடி விவசாயிகள் கண்ணீர்
புளியங்குடி : தண்ணீருக்காக ஏங்கி வாடும் எலுமிச்சை மரங்களை கண்டு புளியங்குடி விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர்.நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மாவட்டத்தின் வடக்கு எல்லை பகுதியில் அமைந்திருக்கும் நகரம் புளியங்குடி.
ஆனால் பலர் இதுபோன்று ஆற்றுப்படுகைகளில் கிணறுகள் வெட்டி தண்ணீர் கொண்டு வந்த நிலையில் அந்த கிணறுகளிலும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு மாறாக விவசாயிகள் சிலர் விலை கொடுத்து டேங்கர் டிராக்டர்களில் தண்ணீரை வாங்கி எலுமிச்சை மரங்களுக்கு பாய்ச்சி மரங்களை காப்பாற்றுகின்றனர். ஆனால் ஏழை, எளிய விவசாயிகள் வேறு வழி தெரியாமல் விளை நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் தண்ணீரின்றி வாடும் எலுமிச்சை மரங்களில் நுனி கருகுதல், தண்டு துளைப்பான், காஞ்சர நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் தாக்கி மரத்தை சேதப்படுத்துகின்றன. இது விவசாயிகளை மேலும் கவலையடை செய்கின்றது. இவ்வாறு விவசாயிகள் மீது விலை வீழ்ச்சி, தண்ணீர் பற்றாக்குறை, தொற்றுநோய் தாக்குதல் என பல தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படுகின்றது.ஆனால் கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்திற்கு கிணறுகள் வெட்டவும், ஆழப்படுத்தவும் நிலவள வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டன. ஆனால் அந்த திட்டமும் காலப்போக்கில் நிறுத்தப்பட்டது. இப்படிப்பட்ட சவாலான சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என வழி தெரியாமல் மதில்மேல் பூனையாக விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.இந்த அவலத்தை போக்கவும், எலுமிச்சைக்கு ஆண்டு முழுவதிலும் சீரான விலை கிடைக்கவும், விலை வீழ்ச்சி ஏற்படும் காலங்களில் எலுமிச்சை பழங்களை குளிர்சாதன கிடங்கில் பாதுகாத்து வைத்து உரிய விலை கிடைக்கும் நேரங்களில் அதனை விற்பனை செய்திட குளிர்சாதன கிடங்கு ஒன்று ஏற்படுத்தித்தர வேண்டும் என விவசாயிகள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதுகுறித்து வாசு.,எம்.எல்.ஏ.,துரையப்பா தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் சுமார் 11 கோடியில் நெல்லை மாவட்டத்தில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும் என்றார். இப்பகுதி விவசாயிகளின் பிரச்னைகளை முதல்வரிடம் கூறி குளிர்பதன கிடங்கை புளியங்குடியில் ஏற்படுத்தித்தர வேண்டும் என எம்.எல்.ஏ.,துரையப்பா முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு :விவசாயிகள் தங்கள் ஜீவாதார தொழிலையும், தங்களையும் பாதுகாக்க தமிழக அரசு வங்கிகள் மூலம் வட்டியில்லா நீண்டகால கடனுதவி தர வேண்டும். மேலும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் நிலத்தடி நீர் பற்றி கண்டறிந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்துதர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இப்பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் நாளை இப்பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.