ADDED : ஜூலை 31, 2011 10:50 PM
பரமக்குடி : நயினார்கோவில் பகைவென்றான் ஆர்.சி., தொடக்கப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டது.
சிவகங்கை ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் எம்.எல்.ஏ., சுந்தரராஜ், ஒன்றிய தலைவர் திவாகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பூலோக விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர். தாளாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைமையாசிரியர் ஜேம்ஸ்ஸ்பானிபிரபாகரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.