Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

காஷ்மீர் முதல்வர் உமர்அப்துல்லா மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் மனு

ADDED : செப் 16, 2011 01:28 AM


Google News

மதுரை : ராஜிவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க வலியுறுத்தி தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக பேசிய காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மீது நடவடிக்கை கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது.

மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் கே.நீலமேகம் தாக்கல் செய்த மனு: ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனையை எட்டு வாரங்களுக்கு நிறுத்தி, ஐகோர்ட் உத்தரவிட்டது. மூவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி தமிழக சட்டசபையில் ஆக., 30ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா இண்டர்நெட்டில் டிவிட்டர்.காம் மற்றும் பேஸ் புக்கில், சட்டசபை தீர்மானத்தை விமர்சித்துள்ளார். ராஜிவ் கொலையாளிகள் தண்டனையை குறைக்க தமிழக சட்டசபையில்வலியுறுத்தியது போல, காஷ்மீர் சட்டசபையில் அப்சல் குரு தண்டனை குறைக்க தீர்மானம் நிறைவேற்றினால், அங்கு கட்சிகள் சும்மா இருக்குமா? என கேள்வி எழுப்பினார். அவர் மீது நடவடிக்கை கோரி தென் மண்டல ஐ.ஜ.யிடம் புகார் கொடுத்தேன். வழக்கு பதிய மத்திய, மாநில அரசுகளிடம் சட்ட கருத்து கேட்கவும் வேண்டுகோள் விடுத்தேன். நடவடிக்கை இல்லை. மத்திய அரசு அட்டர்னி ஜெனரல், தமிழக அட்வகேட் ஜெனரலிடம் சட்ட கருத்து பெற்று, காஷ்மீர் மாநில முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதி ஆர்.மாலா முன் விரைவில் விசாரணைக்கு வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us