Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/வருவாய் பெருக்க வழிவகை அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

வருவாய் பெருக்க வழிவகை அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

வருவாய் பெருக்க வழிவகை அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

வருவாய் பெருக்க வழிவகை அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

ADDED : செப் 27, 2011 11:56 PM


Google News
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் உமாமகேஷ்வரி கூறியதாவது: கடந்த தி.மு.க., ஆட்சியில் நகர தொகுதி மிகவும் வளர்ச்சியின்றி பின் தங்கியுள்ளது.

திருத்துறைப்பூண்டி பகுதி நகர் வளர்ச்சியடைய பாடுபடுவது. குறிப்பாக, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி நவீன முறையில் சீரமைக்கப்பட்டு நகராட்சி வருவாயை பெருக்குவதுக்காக øகிள் பாதுகாப்பகங்கள் அமைக்கவும், பழைய பஸ் ஸ்டாண்டில் புதிய வணிக வாளகம் அமைத்து நகராட்சி வருவாயைப் பெருக்குவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.சாக்கடையையாய் காட்சி தரும் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து குளங்களையும் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க முயற்சி மேற்கொள்வதோடு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். நகர புற வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தேவையான பணிகளை செய்து முடிப்பேன். இவ்வாறு அ.தி.மு.க., வேட்பாளர் உமாமகேஷ்வரி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us