/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'
திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'
திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'
திருச்சி சிறையில் டி.ஐ.ஜி.,க்கள் அதிரடி : சோதனையில் சிக்கிய "மொபைல்ஃபோன்'
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் மத்திய மண்டலம் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஜி.,க்கள் நடத்திய திடீர் சோதனையில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 'மொபைல்ஃபோன்' சிக்கியது.
இதனால், திருச்சி மத்திய சிறைக்குள் தடை செய்யப்பட்ட மொபைல்ஃபோன் புழக்கம் தாராளமாகி இருப்பதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து, மத்திய மண்டல டி.ஐ.ஜி., அமல்ராஜ், சிறைத்துறை டி.ஐ.ஜி., மற்றும் கண்காணிப்பாளர் (பொறுப்பு) துரைசாமி, எஸ்.பி., லலிதாலட்சுமி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜெயபாண்டியன் தலைமையில் 130க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று காலை 10.30 மணியளவில் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் படைப்பிரிவும் ஈடுபடுத்தப்பட்டன. இதில், கழிவறைக்கு செல்லும் வழியில் மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 'மொபைல்ஃபோன்' ஒன்று சிக்கியது.
இதுகுறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி., துரைசாமி கூறுகையில், ''ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று. சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தற்போது சோனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கைதிகளில் யாரோ ஒருவன் புதைத்து வைத்த பழைய மொபைல்ஃபோன் ஒன்று கைப்பற்றப்பட்டது. மற்றபடி வேறு எதுவும் சிக்கவில்லை,'' என்றார். திருச்சி மத்திய சிறையில் தி.மு.க., பிரமுகர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சிறையிலிருந்து மொபைல்ஃபோன் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.