/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பஸ் பயணிகள் கவனத்திற்கு திருட்டை தவிர்க்க அறிவுரைபஸ் பயணிகள் கவனத்திற்கு திருட்டை தவிர்க்க அறிவுரை
பஸ் பயணிகள் கவனத்திற்கு திருட்டை தவிர்க்க அறிவுரை
பஸ் பயணிகள் கவனத்திற்கு திருட்டை தவிர்க்க அறிவுரை
பஸ் பயணிகள் கவனத்திற்கு திருட்டை தவிர்க்க அறிவுரை
ADDED : ஆக 19, 2011 10:22 PM
வடமதுரை:பஸ் பயணிகள், உடைமைகளை திருட்டில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்
குறித்து, வடமதுரை போலீசார் துண்டுபிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர்.
அதில் கூறியிருப்பதாவது:* பஸ்களில் கைக்குழந்தையுடன் சில பெண்மணிகள்
உங்கள் அருகில் நின்று கொண்டோ, அமர் ந்து கொண்டோ, குழந்தையை தாலாட்டுவது
போல நடிப்பர். உங்கள் கவனம் சிதறும் நேரத்தில் உடைமைகளை திருடுவார்கள். *
பஸ்சில் பயணிக்கும் போது கைப்பை, பர்ஸ், நகைகள் அணிந்திருந்தால் அவற்றின்
மீது கவனமாக இருக்கவும்.* அடிக்கடி உங்கள் உடைமைகளை சரிபார்க்கவும்.
கண்டிப்பாக, ஒவ்வொரு பஸ் நிறுத்தத்தின் போதும் சரிபார்க்கவும்.
* சந்தேக நபர்கள் என, கருதினால், நடத்துனர், டிரைவரிடம் தகவல் தரவும். *
உங்களது கவனக்குறைவு, இரக்க குணத்தால் உங்கள் உடைமைகளை இழந்து விட
வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.