Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/"ஸ்டவ்' வெடித்து இளம்பெண் பலி

"ஸ்டவ்' வெடித்து இளம்பெண் பலி

"ஸ்டவ்' வெடித்து இளம்பெண் பலி

"ஸ்டவ்' வெடித்து இளம்பெண் பலி

ADDED : செப் 25, 2011 11:56 PM


Google News

கும்பகோணம்: கும்பகோணத்தில் 'ஸ்டவ்' வெடித்து தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று காலை இறந்தார்.

கும்பகோணம் மேலக்காவேரி குசவன் தெருவைச் சேர்ந்தவர் கரிகாலன் (35). இவரது மனைவி லதா (32). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லதா வீட்டில் மண்ணெண்னை ஸ்டவில் சமைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லதாவின் சேலையில் தீப்பிடித்தது. பரவிய தீ உடல் முழுவதும் பட்டு லதா பலத்த தீக்காயமைடந்தார். உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச் சை பெற்று வந்த லதா நேற்று காலை இறந்தார். திருமணமாகி ஐந்து ஆண்டுகளில் லதா இறந்ததால் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்திருக்கலாமா? என்று, கும்பகோணம் ஆர்.டி.ஓ., வெங்கடேசன் விசாரித்து வருகிறார். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீ ஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us