ADDED : ஆக 29, 2011 10:21 PM
திண்டிவனம் : திண்டிவனம் பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் பிரகாசம் தலைமை தாங்கினார்.
தேசிய கொடியை திருச்சி டாக்டர் இசபெல்லா ஏற்றி வைத்தார். கொடி அணி வகுப்பு நிகழ்ச்சிக்கு பின், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. திருச்சி மண்டல முன்னாள் தலைவர் விக்டர், தொழிலதிபர் சுப்பராயலு, பள்ளி முதல்வர் பாக்கியநாத், தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், தேசிய மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் பிரபாகரன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.