ADDED : ஆக 19, 2011 04:42 AM
மதுரை: போடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,31. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சீசனுக்கு தகுந்தாற்போல் பல்வேறு வியாபாரங்
களில் ஈடுபட்டு வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், அவரை ஒரு நாய் கடித்தது. முறையாக சிகிச்சை பெறவில்லை. ரேபிஸ் நோய் முற்றியது. மதுரை அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டார். தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


