/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய எஸ்.ஐ., மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்புகுடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய எஸ்.ஐ., மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய எஸ்.ஐ., மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய எஸ்.ஐ., மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய எஸ்.ஐ., மக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
ADDED : அக் 06, 2011 01:21 AM
கடலூர் : வடலூர் அருகே குடிபோதையில் ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ஓட்டி
வந்த கார் மோதி இருவர் காயமடைந்தனர்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் சப்
இன்ஸ்பெக்டருக்கு தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். வடலூர் அடுத்த
காட்டுக்கொல்லையைச் சேர்ந்தவர் கண்ணன், 30. கடலூர் ஆயுதப்படை பயிற்சி சப்
இன்ஸ்பெக்டர். இவர் நேற்று இரவு 9.30 மணிக்கு விருத்தாசலத்தில் பணி
முடித்துவிட்டு, அதற்கு பின்னர் மது அருந்தி விட்டு டாடா இன்டிகா (பிஒய் 01
ஏவி 7871) காரில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி
வந்தார். போதை அதிகமானதால் காரை சாலையில் தாறுமாறாக ஓட்டி வந்தார்.
நெய்வேலி அடுத்த வீணங்கேணி அருகே வரும்போது முன்னால் சென்ற மோட்டார் பைக்
மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். தொடர்ந்து வடலூர் புதுநகர் மசூதி
எதிரே மோட்டார் பைக் மீது மோதி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார்
கவிழ்ந்தது. அதில் மோட்டார் பைக்கில் சென்ற ஆபத்தாரணபுரத்தைச் சேர்ந்த
செல்வராஜ் 44, வெங்கடேசன் 40 இருவரும் படுகாயமடைந்தனர். கார் கவிழ்ந்து
காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் கண்ணனை அருகில் இருந்த பொது மக்கள் காப்பாற்ற
முயன்றனர். ஆனால் அவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி தாக்கினார். ஆத்திரமடைந்த
பொதுமக்கள் அவரைத் தாக்கி வடலூர் போலீசிடம் ஒப்படைத்தனர். அதனைத்
தொடர்ந்து கண்ணனை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது
குறித்து வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


