ADDED : செப் 13, 2011 12:34 AM
மதுரை : மதுரை மேற்கு மற்றும் வடக்கு வட்டார வளமையங்களில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ மதிப்பீடு முகாம் நடந்தது.
மாவட்ட அதிகாரி ஸ்ரீதேவி ஆலோசனையின் பேரில், மேற்பார்வையாளர் திருஞானம் துவக்கி வைத்தார். மனவளர்ச்சி, உடல் வளர்ச்சிகளில் குறைபாடுள்ளவர்களுக்கு இலவச பரிசோதனை செய்து சான்று வழங்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உமா, சாதனா அறக்கட்டளை நிர்வாகி நம்மாழ்வார் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.


