Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்டத்தில் 899 மி.மீ., மழை: குப்பநத்தத்தில் 109 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் 899 மி.மீ., மழை: குப்பநத்தத்தில் 109 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் 899 மி.மீ., மழை: குப்பநத்தத்தில் 109 மி.மீ., பதிவு

மாவட்டத்தில் 899 மி.மீ., மழை: குப்பநத்தத்தில் 109 மி.மீ., பதிவு

ADDED : செப் 14, 2011 12:11 AM


Google News
கடலூர்:மாவட்டத்தில் நேற்று அதிகளவாக 899 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக குப்பநத்தத்தில் 109.6 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மழையின் காரணமாக வீராணத்திலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.வீராணம் ஏரியில் தற்போது 43.2 அடி தண்ணீர் உள்ளது. 700 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. இதில் பாசனத்திற்காக 30 கன அடியும், சென்னை குடிநீருக்காக 74 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேத்தியாதோப்பு அணைக்கு 112 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர் மழை காரணமாக வாலாஜா ஏரி உபரிநீர் 1,775 கன அடி திறந்து விடப்படுவதால் பரவனாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., விவரம்:கடலூர் 55.8, கொத்தவாச்சேரி 20, சிதம்பரம் 44.6, அண்ணாமலை நகர் 35.4, பரங்கிப்பேட்டை 10, புவனகிரி 57, சேத்தியாத்தோப்பு 37.5, காட்டுமன்னார்கோவில் 16.2, லால்பேட்டை 8, ஸ்ரீமுஷ்ணம் 5, விருத்தாசலத்தில் 101, குப்பநத்தம் 109.6, மே.மாத்தூரில் 105, காட்டுமயிலூரில் 35, வேப்பூர் 32, தொழுதூர் 75, பெலாந்துறை 27, கீழ்ச்செருவாய் 34, லக்கூர் 91.2 மி.மீ., மழையும் பெய்துள்ளது. இதில் அதிகளவாக குப்பநத்தத்தில் 109.6, மாவட்டத்தில் மொத்தம் 899.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us