/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.,வில் 1,302 பேர் விருப்பம்உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.,வில் 1,302 பேர் விருப்பம்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.,வில் 1,302 பேர் விருப்பம்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.,வில் 1,302 பேர் விருப்பம்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க.,வில் 1,302 பேர் விருப்பம்
ADDED : செப் 20, 2011 12:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தே.மு.தி.க.,சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, 1,302 பேர் விருப்ப மனு வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து அனைத்து கட்சிகளும் மாவட்ட அளவில் விருப்ப விண்ணப்பங்களை பெற்றுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த, தே.மு.தி.க.,வும் மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இரு நகராட்சி தலைவர்கள், நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், மற்றும் பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், யூனியன் கவுன்சிலர்கள் ஆகியவற்றில் போட்டியிட மொத்தம், 1,302 தே.மு.தி.க.,வினர் விருப்ப விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். ஓசூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ராமசாமி ரெட்டி ஆகியோர் உள்ளிட்ட, 10 பேர் விருப்ப விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மாவட்ட இளைஞர் அணி செயலாளர் துரை அன்பரசு, மாவட்ட பொருளாளர் சீனிவாசன், நகர பொருளாளர் பரந்தாமன் ஆகியோர் உள்ளிட்ட, 9 பேர் விருப்ப விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.
மேலும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு, 31 பேரும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு, 115 பேரும் போட்டியிட விருப்ப விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இதே போல் மாவட்ட அவைத்தலைவர் சின்னராஜீ உள்ளிட்ட, 670 பேர் யூனியன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 266 பேரும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, 201 பேரும் விருப்ப விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம், 1,302 பேர் விருப்ப விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். அ.தி.மு.க.,வினருக்கு இணையாக தே.மு.தி.க.,வினரும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.


