ADDED : செப் 05, 2011 06:58 PM
சென்னை:சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி சக்சேனாவின் முன்ஜாமின் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தியான பீட அறக்கட்டளையின் மேலாளர் நித்ய ஆத்ம பிரபானந்தா, தி.நகர் போலீசில் சக்சேனா, அய்யப்பன் உள்ளிட்ட சிலருக்கு எதிராக புகார் கொடுத்தார். இதையடுத்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சக்சேனா, மனு தாக்கல் செய்தார். இவருக்கு முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நித்ய ஆத்ம பிரபானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை நீதிபதி மதிவாணன் விசாரித்தார். முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி மதிவாணன் உத்தரவிட்டார்.


