/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/சுமைதூக்கும் தொழிலாளருக்கு பெரம்பலூரில் "இன்டர்வியூ'சுமைதூக்கும் தொழிலாளருக்கு பெரம்பலூரில் "இன்டர்வியூ'
சுமைதூக்கும் தொழிலாளருக்கு பெரம்பலூரில் "இன்டர்வியூ'
சுமைதூக்கும் தொழிலாளருக்கு பெரம்பலூரில் "இன்டர்வியூ'
சுமைதூக்கும் தொழிலாளருக்கு பெரம்பலூரில் "இன்டர்வியூ'
ADDED : ஆக 08, 2011 02:37 AM
பெரம்பலூர்: 'பெரம்பலூரில் சுமை தூக்கும் தொழிலாளர் பணிக்கு வரும் 17ம் தேதி இன்டர்வியூ நடக்கிறது' என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஜோதிபாசு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் கீழ் இங்கும் பெரம்பலூர், விளாமுத்தூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய 4 கிடங்குகளில் 40 சுமை தூக்கும் பணியாளர்கள் பணிக்கு ஆட்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு தகுந்த உடல் திறனும், அனுபவமுள்ள 25 வயது முதல் 40 வயது வரை உள்ள 8ம் வகுப்பு தேர்ச்சி, தவறிய நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பொது விநியோக திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கிடங்குகளில் இருந்து சுமைகள் ஏற்ற மற்றும் இறக்கப்பட வேண்டும். தகுதியும் விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் வரும் 17ம் தேதி நடக்கும் இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அரசால் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


