/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுந்தரபுரி மக்கள் கோவை கலெக்டருக்கு வேண்டுகோள்சுந்தரபுரி மக்கள் கோவை கலெக்டருக்கு வேண்டுகோள்
சுந்தரபுரி மக்கள் கோவை கலெக்டருக்கு வேண்டுகோள்
சுந்தரபுரி மக்கள் கோவை கலெக்டருக்கு வேண்டுகோள்
சுந்தரபுரி மக்கள் கோவை கலெக்டருக்கு வேண்டுகோள்
ADDED : ஆக 03, 2011 01:31 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த சுந்தரபுரியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கையகப்படுத்தப்பட்ட இடத்தை மீட்டு, பட்டா வழங்க வேண்டுமென்று கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த தாத்தூர் கிராம மக்கள், குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம் கொடுத்த மனு:ஆனைமலை ஒன்றியம் தாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரபுரியில் ரோட்டோரத்திலும், வாய்க்கால் பகுதியிலும், தனியார் நிலத்திலும் குடும்பர் இன மக்கள் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுத்ததால், ஆதிதிராவிட நலத்துறையால் கடந்த 1998ல் சுந்தரபுரியில் 2.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.அந்த இடத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த போது, நிலத்தின் பழைய உரிமையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தற்போது அரசுக்கு சாதகமாக தீர்ப்பாகியுள்ளது. இலவச வீட்டு மனைப்பட்டா கிடைக்கும் என்ற நம்பிகையில் ரோட்டோரங்களில் குடிசை அமைத்து வசித்து வருகிறோம். இந்நிலையில், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி, நிலத்தை பிரித்து வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர். இந்நிலையில், அரசு அதிகாரிகளும் நிலத்தின் உரிமையாளர்கள் சேர்ந்து, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்துள்ளனர். அந்த இடத்தில், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளை தவிர்த்து, வேறு ஊராட்சி, பேரூராட்சி பகுதி மக்களுக்கு பட்டா கொடுத்துள்ளனர். கையகப்படுத்தப்பட்ட இடத்தை பெற வேண்டும் என்பதற்காகத்தான் அரசு சார்பில் வழக்கு நடத்தப்பட்டது. தற்போது, அதிகாரிகள் மாற்று இடத்தை பெற்றுள்ளது சட்டத்திற்கு புறம்பாக உள்ளது. ஏற்கனவே அரசு கையகப்படுத்தி நிலத்தை மீட்டு, சுந்தரபுரியை சேர்ந்த குடும்பர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.