ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு
ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு
ஒருநாள் போட்டிகளிலிருந்து டிராவிட் ஓய்வு
ADDED : ஆக 07, 2011 09:51 AM
லண்டன் : இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டி தொடருக்கு பிறகு டுவென்டி-20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து உடனான ஒருநாள் போட்டிக்கான அணியில் டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிராவிட், 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இனி ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வுபெற உள்ளதாகவும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.