Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

ADDED : செப் 22, 2011 12:30 AM


Google News

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், சிமென்ட் சாலை தரமாக அமைக்க வேண்டும் என்று கூறி, பொது மக்கள், பணியை தடுத்து நிறுத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் ரயில்வே ரோடிலிருந்து, ராஜாஜி மார்க்கெட் வழியாக, ரெட்டிப்பேட்டை செல்லும் தெருவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, நகராட்சி பள்ளி, சினிமா தியேட்டர், மீன் கடைகள், மட்டன் கடைகள், காய்கறிக் கடைகள் போன்றவை உள்ளன. தினமும், ஏராளமான மக்கள் இவ்வழியே செல்கின்றனர். நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கும், மார்க்கெட்டிற்கும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இச்சாலை குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்தால் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு, சாலை சேறும் சகதியுமாக மாறிவிடும். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, அந்த தெருவில் சிமென்ட் சாலை அமைக்க, நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த சில தினங்களாக, சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று, சாலை பணி மேற்கொண்டவர்கள், குறைந்த அளவு சிமென்ட்டுடன், ஜல்லி மணலை கலந்து, சாலை அமைத்துள்ளனர்.



இதைக் கண்டு, மக்கள் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தரமற்ற முறையில் சாலை அமைக்கக் கூடாது எனக் கூறி, சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, ஜெகன் என்பவர் கூறியதாவது: சிமென்ட் சாலை அமைப்பதற்கு முன், சாலையில் மணல் கொட்டி, அதன் மேல் சிமென்ட் கலவை கலந்த ஒன்றரை ஜல்லியைக் கொண்டு சாலை அமைக்க வேண்டும். அதன் பிறகு, சிமென்ட் கலவை கலந்த முக்கால் ஜல்லி போட வேண்டும். ஆனால், ஒன்றரை ஜல்லி முறையாகப் போடாமல், சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. பள்ளமாக இருந்த இடங்களில் மட்டும், ஒன்றரை ஜல்லி போட்டனர். அதிலும், சிமென்ட்டிற்கு பதிலாக வெறும் மணல் மட்டுமே இருந்தது. முக்கா ஜல்லியுடன், குறைந்த சிமென்ட் மற்றும் ஜல்லி மணலைக் கொட்டி சாலை அமைக்கின்றனர். சிமென்டிற்கு பதிலாக, ஜல்லி மணல் கொட்டுவது தவறானது. எனவே, சிமென்ட் கலந்து, சாலை அமைக்கும்படி கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ''தரையில், ஆற்று மணலுக்கு பதிலாக, ஜல்லி மணலை கொட்டியதாகவும், அதை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், ஒப்பந்ததாரர் தெரிவித்தார். எனினும், ஊழியர்களை உடனிருந்து, தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us