மேலும் ஒரு மோசடி வழக்கில் மார்ட்டின் கைது
மேலும் ஒரு மோசடி வழக்கில் மார்ட்டின் கைது
மேலும் ஒரு மோசடி வழக்கில் மார்ட்டின் கைது

கோவை: மில் அதிபரை கடத்தி, கடுமையாக தாக்கி 125 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்த புகாரில் லாட்டரி அதிபர் மார்ட்டின் உட்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மில் உரிமையாளரின் பதிலை கண்டுகொள்ளாத மார்ட்டின் தரப்பினர், மர்ம இடத்துக்கு கடத்தி, கட்டாயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து மில்லின் உரிமையில் 90 சதவீத பங்கை வாங்கிக் கொண்டதாக கையெழுத்துப் பெற்றனர். இது தொடர்பாக, அப்போதே சரவணம்பட்டி போலீசில் நரஹரசெட்டி புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்காமல் விட்டு விட்டனர். சமீபத்தில், கோவை மாவட்ட எஸ்.பி., இடம் புகார் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஏ.டிஎஸ்.பி., துரை உட்பட பலர் தலைமறைவாகி உள்ள நிலையில், மார்ட்டின், பெஞ்சமின் ஆகியோர் நிலமோசடி வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று காலை இருவரையும் கைது செய்து, பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர். மாலை 6.10 மணிக்கு இருவரையும் ஜே.எம்.எண்: 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் செல்லபாண்டியன் விசாரித்து, இருவரையும் வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, மார்ட்டினை விசாரிக்க மூன்று நாள் கஸ்டடி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை வரும் திங்களன்று நடக்கும் என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, லாட்டரி அதிபர் மார்ட்டின், இவருடன் கைது செய்யப்பட்ட பெஞ்சமின் இருவரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று காலை மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். கோவை கோர்ட்டுக்கு மார்ட்டின் கொண்டு வருவதையடுத்து, ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.