/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : செப் 16, 2011 12:26 AM
தர்மபுரி: தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இரு நாட்கள் விழிப்புணர்வு அரங்கம் மற்றும் செய்முறை பயிற்சிகள் இன்று துவங்குகிறது.
டி.எஸ்.பி., சந்தனபாண்டியன் கூறியது: சாலை விபத்து தடுப்பு, விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் பார்வை அரங்கங்கள் எஸ்.பி., அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து துறை, தனியார் டிரைவிங் பள்ளி, பைக் ஹோரூம்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்று விதிமுறை மற்றும் பயிற்சி குறித்து மாதிரி அரங்கங்கள் அமைக்கவுள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் மற்றும் பைக் ஓட்டுனர்கள் கலந்துகொள்வதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, மற்றும் விபத்து தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு அரங்கங்கள் மற்றும் பயிற்சிகள் காண்பிக்கப்படவுள்ளது. சேலம் சரக டி.ஐ.ஜி., (பொறுப்பு) பாலநாகாதேவி கலந்துகொண்டு விழிப்புணர்வு அரங்கத்தை திறந்துவைக்கிறார். பொதுமக்களுடம் இந்த அரங்கத்தை பார்வையிட்டு தங்கள் சந்தேகங்களை கேட்டு நிவர்த்திபெறலாம் என்றார்.


