ADDED : செப் 20, 2011 09:38 PM
சிவகாசி:சிவகாசி அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 28.
இவர் இதே
ஊரைச் சேர்ந்த முருகன் மகள் விஜயா, 22, வை காதலித்தார். இவர்களது காதலுக்கு
பழனிச்சாமி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பழனிச்சாமிக்கு
கடந்த 9ம்தேதி நெடுங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பாண்டிச்செல்வி, 23, யை
திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்த சில நாட்களிலேயே, முன்னாள் காதலி
விஜயாவை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தன் கணவர்
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்து, சிவகாசி மகளிர் போலிசில்
முதலல்மனைவி புகார் செய்தார். இளவேணி எஸ்.ஐ., விசாரணை நடத்தி,
பழனிச்சாமி, விஜயா இருவரையும் கைது செய்தனர்.


