/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்புதிருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்பு
திருவதிகை சரநாராயண பெருமாள் திருக்கண்ணாடி அறையில் அருள்பாலிப்பு
ADDED : ஜூலை 31, 2011 03:21 AM
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் அமாவாசையை முன்னிட்டு நேற்று
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கடலூர் மாவட்டம்
பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள்
கோவிலில் நேற்று (30ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 6 மணிக்கு
நடைதிறப்பு 6.30க்கு மூலவர் சரநாராயண பெருமாள், தாயார், சயனநரசிம்மர்
சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.
7 மணிக்கு மூலவர் சரநாராயண
பெருமாள் பூவாலங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து 9
மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், உள்புறப்பாடும்
நடந்து சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்ணாடி அறையில் பெருமாள்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒரு மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4
மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு சாயரட்சை, நட்சத்திர பூஜையும், இரவு 9
மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடந்தது.