Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஓட்டுக்கு பணம் வழக்கு: குல்கர்னி கோர்டில் ஆஜர்

ஓட்டுக்கு பணம் வழக்கு: குல்கர்னி கோர்டில் ஆஜர்

ஓட்டுக்கு பணம் வழக்கு: குல்கர்னி கோர்டில் ஆஜர்

ஓட்டுக்கு பணம் வழக்கு: குல்கர்னி கோர்டில் ஆஜர்

UPDATED : செப் 27, 2011 12:36 PMADDED : செப் 27, 2011 09:52 AM


Google News
புதுடில்லி: நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பணம் கொடுத்த வழக்கில் முக்கிய சாட்சியான சுதீந்திரா குல்கர்னி, கோர்டில் ஆஜரானார்.

முன்னதாக இந்த வழக்கில் அமர்சிங், மற்றும் முன்னாள் பா.ஜ. எம்.பி.க்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஜாமின் பெற்றுள்ள அமர்சிங் உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திராகுல்கர்னிக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். இன்று கோர்டில் ஆஜரான குல்கர்னி, காங்கிரஸ் கட்சியினர் தான் பணம் கொடுத்தனர். என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்ல தயார் என்றார். முன்னதாக தனக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கலும் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us