
வாயே திறக்காமல்...!
விழுப்புரம் நகராட்சியில், 36 வார்டுகளில், 10 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர்.
'சின்னையான்னு கூப்பிடு...!'
சுற்றுச்சூழல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சின்னையா, அமைச்சராகும் முன் சென்னை, பெருங்களத்தூரில் இருந்த ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியில் பணிபுரிந்தவர். கட்சி பணிகளில் ஆர்வம் காட்டியதால், தற்போது அமைச்சராகி உள்ளார். அவருடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஏராளம். அமைச்சர் பதவி ஏற்ற பின், அவர் கலந்து கொள்ளும் பொது விழாக்களில், தன்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் யாரையாவது பார்த்து விட்டால், உடனே பெயர் சொல்லி அழைத்து, மனம் விட்டு பேசுகிறார். அமைச்சர் என்பதால் அவரது நண்பர்கள், 'அண்ணே...' என்று அழைத்தால், 'யோவ்... அப்படி கூப்பிடாதே... எப்போதும் போல் சின்னையான்னே கூப்பிடு...' என்று செல்லமாக கடிந்து கொள்கிறார். இதைக் கண்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'பதவி வரும் போது பணிவு வரணும்ங்கறதை அண்ணன் நல்லா கடைப்பிடிக்கறாரே...' என, மெச்சினார்.


