ADDED : செப் 18, 2011 09:32 PM
சிதம்பரம்:சிதம்பரம் நகராட்சி சார்பில் வெல்லப்பிறந்தான் தெருவில் அண்ணா
துரை நூற்றாண்டு நினைவு சாலையோர பூங்கா திறப்பு விழா நடந்தது.
சிதம்பரம் நகராட்சி பொதுநிதி 75 ஆயிரம் ரூபாய் செலவில் அண்ணா துரை
நூற்றாண்டு நினைவு சாலையோர பூங்கா வெல்லப்பிறந்தான் தெருவில்
அமைக்கப்பட்டது. பூங்காவை நகர மன்ற துணைத் தலைவர் மங்கையற்கரசி திறந்து
வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் மணி, பழமண்டி சண்முகம், முன்னாள்
கவுன்சிலர் எழில்மதி, பங்கேற்றனர்.