/உள்ளூர் செய்திகள்/கரூர்/முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?
முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?
முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?
முட்புதர் சூழ்ந்த பஞ்சப்பட்டி ஏரி கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள பஞ்சப்பட்டி ஏரியில் முட்புதர்கள் மண்டியிருப்பதால், மழைநீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மறைமுகமாக ஊற்று கிணறு பகுதிகளுக்கு, தண்ணீர் ஊற்றாக ஏரி பயன்படுகிறது. ஏரியின் மூலம் மொத்தம் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்து வருகின்றது. முறையான பராமரிப்பில்லாத காரணத்தினால், தற்போது ஏரியின் உள்பகுதியில் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்துள்ளன. ஏரியில் உள்ள தண்ணீரை முட்புதர்கள் உறிஞ்சுவதால், தேங்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாசன வசதிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீர் அனைத்தையும் ஏரியில் தேங்க முடியாத நிலை உள்ளது. பஞ்சப்பட்டி ஏரி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், பஞ்சப்பட்டி ஏரி முழுவதும் வளர்ந்துள்ள முட்புதர்களை முழுவதுமாக வெட்டி, அகற்ற வேண்டும். ஏரியை தூர்வார வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


