Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எஸ்.எம்.எஸ்., உத்தரவை கைவிடக் கோரி வரும் 13ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

எஸ்.எம்.எஸ்., உத்தரவை கைவிடக் கோரி வரும் 13ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

எஸ்.எம்.எஸ்., உத்தரவை கைவிடக் கோரி வரும் 13ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

எஸ்.எம்.எஸ்., உத்தரவை கைவிடக் கோரி வரும் 13ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 03, 2011 01:42 AM


Google News

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் வருகையை பதிவு செய்ய கலெக்டர் அமுதவல்லி எடுத்துள்ள எஸ்.எம்.எஸ்., நடவ டிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து கூட்டணியின் பொதுச் செயலாளர் அப்துல்மஜீத் அறிக்கை: ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்து லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள், இவர்களை பார்வையிடும் நூற்றுக்கணக்கான கல்வி அதிகாரிகள் மீது நம்பிக்கை இழந்து எஸ்.எம்.எஸ்., மீது நம்பிக்கை வைத்து கலெக்டர் அமுதவல்லி எடுத்துள்ள நடவடிக்கையை கைவிடவேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்புவதால் ஏற்படும் பதட்டம், தடுமாற்றம், முறையாக அனுப்ப முடியாமை போன்ற நடவடிக்கைகளால் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். தர்மபுரி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட இது போன்ற நடவடிக்கை கல்வியில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கலெக்டர் மாறியதால் திட்டமும் கைவிடப்பட்டது. எனவே கலெக்டரின் எஸ்.எம்.எஸ்., திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால் வரும் 13ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு எஸ்.எம்.எஸ்., திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us