ADDED : ஜூலை 28, 2011 03:28 AM
மதுரை : அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) சார்பில் ஊழல்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக அண்ணா நகரில் தொடங்கிய ஊர்வலம்,
அண்ணா பஸ்ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமை
வகித்தார். முன்னாள் மாநிலத்தலைவர் பெருமாள், மாநிலத்துணைத்தலைவர் ஆதிசேசன்
பேசினர். நிர்வாகிகள் ஜெகதீஸ்வரன், பொன்சரண், முத்துராமலிங்கம்,
சந்தனகுமார், செந்தில்குமார், செந்தில் உட்பட பலரும் பங்கேற்றனர்.